Monday 4 January 2016

அரங்கனும் அவன் அருளால் ஏற்பட்ட இந்திய சரித்திர மாற்றமும் :- பாகம் – 01

அரங்கனும் அவன் அருளால் ஏற்பட்ட இந்திய சரித்திர மாற்றமும் :- பாகம் – 01


அரங்கன் பற்றி நாம் அறிந்த சரித்திரம் மிக குறைவே .. சுமார் 1200 ஆண்டுகள் இருக்கலாம்!! அதற்கு முன் அவர் செய்த சரித்திர பணிகள் நாம் அறியமாட்டோம்!! ராமனுஜர் காலத்தே .. சமண பௌத்தம் போன்ற வேதப்புறம்பான மதங்களை வென்று எடுக்க உதவியதை முன்பே நான் எழுதி இருக்கிறேன்..

நாம் இப்போது காணப்போவது 14ஆம் நூற்றாண்டின் கோரமுகம் .... பாண்டிய மன்னர்கள் வாரிசு சண்டையிட்டுக்கொண்டு மதுரை அரசை மற்றும் தமிழகத்தை மிக மிக துண்டு துண்டான அரசர்கள் கொண்ட வலிமை யற்றதாக ஆக்கி வைத்து இருந்தனர் (மாறவர்மன் குலசெகரனுடைய மகன்கள் சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் சண்டை !!)
(
On the death of Kulasekara Pandyan I in 1308 CE, a conflict stemming from succession disputes arose amongst his sons. Jatavarman Sundara Pandyan III the legitimate & younger son and Jatavarman Veera Pandyan II, the illegitimate older son (who was favoured by the king) fought each other for the throne. Accounts of Muslim historians Wassaf and Amir Khusrow say he was killed by Sundara Pandyan in 1310 CE.[18] This led to a long protracted civil war.)


இவர்களின் வாரிசு சண்டை Amir Khusrau என்கிற முஸ்லிம் இலக்கியவாதி தனது நாட்குறிப்பில் எழுதும் அளவிற்கு வடநாட்டிலும் தெரிந்து இருந்து .. அங்கிருந்து மாலிக் காபூர் என்கிற கொடுங்கோலன் தமிழகத்தை சூறையாட வந்து அனைத்து செல்வங்களையும் ... இறைமூர்த்தங்களையும் நிர்மூலமாக்க உதவியது ..இவன் கொள்ளை அடிக்க வந்தவன் மட்டுமே!! இவனால் ஸ்ரீரங்கத்தில் கொல்லப்பட்டவர்கள் பல்லாயிரவர் என்று கோவிலொழுகு கூறுகிறது... 



பின்னர் 1323 உல்லுக்கான் என்று அழைக்கப்பட்ட முகமது பின் துக்ளக் படையெடுத்து வந்து ...மதுரையில் ஒரு ஆட்சியை நிறுவினான் ..

(https://en.wikipedia.org/wiki/Madurai_Sultanate) அதுவரை நமது அரசர்கள் ஒருவருக்கொருவர் சண்டை இட்டாலும் கோவில்கள் நகரங்களை அழிக்க மாட்டார்கள் .. பாமர்களை கொல்ல மாட்டார்கள் .. பெண்களை மானபங்க படுத்த மாட்டார்கள் .. இவை அனைத்தும் நடந்தன !!!


ஹிந்துக்களின் மீது கட்டவிழ்க்கப்பட்ட கொடூரங்களை நேரில் கண்டு எழுதிய இபுன் பட்டுடாவின் (
http://ibnbattuta.berkeley.edu/) பார்வையில் ஹிந்து கணவன் மனைவி மற்றும் சிறு குழந்தைகளை கூட கொடூரமான முறையில் கொன்றதை காண சகிக்க முடியவில்லை என்று ஹிந்துக்களின் மீது பரிதாப்பட்டு எழுதியுள்ளார் !!



இவை அனைத்தும் நடந்து கொண்டு இருந்தபோது .. ஹோய்சாள  மன்னனா வீரவல்லாளன் (1341) சுமார் ஒரு லக்ஷம் படை வீரர்களுடன் மதுரை சுல்தானின் வெறும் 6000 படை வீர்களுடன் தோற்ற கதை கேட்டால் நாமெல்லாம் நம்ப மாட்டோம் ... ஆம் .. முஸ்லிம் படைகளிடம் சமாதம் பேசி .. அவர்களால் வஞ்சிக்கப்பட்டு கொல்லபட்டு .. . அவனது பிணம் வைக்கோல் திணிக்கப்பட்டு ... இன்று கோரிப்பாளையம் என்று (அதனால்தான்) அழைக்கப்படுகிற இடத்தில் தொங்கவிடப்பட்டு ... கேவலப்படுத்தப்பட்டது .. 



In c.1342-3, a decisive war that would end the Hoysala fortunes was fought at Kannanur. Veera Ballala III fought a pitched battle against Ghiyas-ud-din, the Sultan of Madurai. Just when a Hoysala victory seemed imminent, The Hoysala monarch was captured, and according to historians Chopra et. al, was "strangled and flayed". His son, Veera Ballala IV met the same fate in c.1346, bringing to an end the glorious rule of the Hoysalas.


பின்னர் சுமார் பல ஆண்டுகள் தமிழகத்தில் எவருமே இந்த துலுக்கர் கொடூரத்தை தட்டிகேட்க வரவில்லை!!



இவை எல்லாம் ஒரு புறம் இருக்க .. 1323 ஆண்டு துக்ளக் படையெடுப்பில் ஸ்ரீரங்கம் விட்டு வெளியேறிய நம்பெருமாள் ..பல நாடுகள் சுற்றி கடைசியில் திருமலையில் வாசம் செய்தது வந்த காலத்தே.. விஜயநகர் சாம்ராஜ்யத்தின் அரசர் வீரகம்பண்ண உடையாரின் படைத்தலைவர்களில் ஒருவரான கோபணார்யன்... செஞ்சி பகுதி இவரின் ஆதிகத்தின் கீழே இருந்தது .. இவர் திருமலையில் சென்று அரங்கனை தரிசிக்கிறார்...




இவர் அரங்கனின் மிது மிகவும் பரிவு கொண்டு (அரங்கனுக்கு தெரியும் எவரை தெர்ந்தெடுத்து காரியங்களை செய்விக்க வேண்டும் என்று !!) தனது ஊரான செஞ்சிக்கு எடுத்து சென்று ஆராதித்து வந்தார்..



ஒருலக்ஷம் படையுடன் சென்று வைக்கோல் அடைத்த பிணமான வீரவல்லான் இருக்க .. அரங்கன் எப்படி துலுக்கனை வெல்ல சரித்திரத்தில் இடம் பிடித்தான் என்பதை நாளை பார்ப்போம் ....
 

No comments:

Post a Comment