Monday 23 March 2015

திருக்குறளப்பன் சந்நிதி , தெற்குவாசல் ஸ்ரீரங்கம்







திருக்குறளப்பன் சந்நிதி ..









ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் உள்ளே நுழைந்தவுடன் நாம் காணும் நான்கு கால் மண்டபமும் அதன் மேற்புறம் உள்ள சந்நிதியும் 1546 CE இல் தாத்தாச்சாரியார் என்பவற்றின் ஆணைப்படி ஸ்ரீரங்க தேவராயர் என்பவரால் கட்டப்பட்டது ..



இதற்கான கல்வெட்டுக் குறிப்புகள் படங்களாக இணைக்கப்பட்டுல்லன ..(இந்த கல்வெட்டு புத்தகத்தை எனக்கு குடுத்து உதவிய நண்பர் Deepak Ram அவர்களுக்கு என் நன்றிகள் பல...






இந்த கோவில் க்ராபக்ரஹாம் மற்றும் முன் மண்டபங்கள் .. முன்னே இன்று நாம் வீதியில் காணும் நான்கு கால் மண்டபம்கள் எல்லாம் செய்து வைத்தான் .

இந்த கோவிலின் கோபுரங்கள் 1859 புகைப்படத்தில் தெளிவாக தெரிந்தாலும் பின்னர் 1900 பிறகு எடுக்கப்பட்ட படங்களில் காணப்படவில்லை ..

மேலே காணும் 1780CE வரைந்த படத்தில் ஒரு தேர் இருப்பது இந்த கோவில் மிக சிறப்பாக ரதஉத்சவங்கள் நடைபெற்று இருந்தது தெறிக்கிறது ..


இந்த ஆலையம், தனியார் ஆலையம் என்று 1942 ஆண்டு அரசுடன் நடந்த கோர்ட் கேஸ் இல் தீர்ப்பாகி தற்போது ஆறு தாத்தாச்சாரியார் குடும்பங்களின் சுழல் முறை கட்டுப்பாட்டில் உள்ளது.

அன்றைய 1540 களில் வாழ்ந்த தாத்தாச்சாரியார் மிகப்புகழ் வாய்ந்தவராக இருந்திருக்கிறார் ... அவருடைய செல்வாக்கு விஜயநகர சாம்ராஜ்யத்தில் மிகுதியாக இருந்தமை கோவில் ஒழுகுவில் தெரிகிறது ...

இவர் வீரநாராயண எரி (தற்கால வீராணம்) ஏரிக்கு கரைகளை பலப்படுத்தவும் மதகுகளில் கற்கள் அமைக்கவும் பொருள் உதவி செய்ததாக தெறிக்கிறது ..

இந்த இடத்தில் இந்த ஆலயம் 1500 CE அமைய காரணம் ...இங்குதான் முன்னொரு காலத்தில் காவேரி நதி அரங்கனின் ஆலயத்தின் அருகே சென்று கொண்டு இருந்த காலத்தே முக்கியமான  படித்துறையாக இருந்தது...

அதை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம் ....

மேல காணும் 1780CE வரையப்பட்ட படத்தின்  =>   HD print download   <=   செய்ய ..